வெள்ளி, 13 செப்டம்பர், 2013

குந்தவை ராஜ்ஜியம் நாவலை பற்றிய விளக்கம்

குந்தவை ராஜ்ஜியம் நாவலை பற்றிய   விளக்கம் 

இந்த நாவலின் கதை களமாக சோழ தேசத்தில் இருந்து தூதவன் தன் மன்னருக்கு தூது செய்தி கொண்டும் செல்லும் பயணத்தில், அவனது நினைவுகள் கடந்த காலத்தில் ஒரு பெண்னின் வாழ்கையை நோக்கி பயணிப்பதாக எழுதி இருக்கிறேன்.
அந்த தூதவனின் பெயர் சிவகந்தன், இவன் சோழ தேசத்து மருமகன் வல்லத்து இளவரசன் வல்வராயனின் வந்திய தேவனின் நம்பிக்கைகூரிய ஒற்றன். மட்டும் அல்லாமல் வளர்ப்பு மகனாக வந்திய தேவர் குந்தவைபிராட்டிமின் தம்பதிக்கு இருந்தான்.
சிவகந்தன்..


சிவகந்தன் நினைவில் பயணித்த பெண், சோழ தேசத்து குலதெய்வமாக போற்றிய குந்தவைபிராட்டியார் தான், சுந்திர சோழின் ஒரே மகளான இவளது சகோதரன் தான் ராஜராஜ சோழன்.
ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் குந்தவையின் வளர்ப்பில் வளர்ந்தான் என்பது கூறிப்பிடக்கது.
சோழ தேசத்து அரசர்களை உருவாக்கும் பெண்ணாக மட்டும் இல்லாமல், சோழ தேசத்து மக்கள் வாழ்வில் கலந்தவள் அவர்களை நோய்களை போக்க எல்லா ஊருகளுலும் மருத்துவமனை உருவாக்கியவள், எல்லா மதங்களை பாதுகாப்பு அரணாக இருந்து மட்டும் அல்லாமல் வைணவம் புத்த மதங்களுக்கு கோயில் கட்டியவள். ராஜராஜசோழனின் நிர்வாகத்தை கண்காணித்தவள், அது மட்டும் அல்ல ராஜேந்திர சோழனை ராஜ கலை கற்று கொடுத்தவள்.
மொத்தில் பண்டைய இந்தியாவில் வலிமையான பெண்களில் ஒருவராக கருதபட்ட குந்தவைபிராட்டியாரை பற்றி வாழ்கை சம்பவங்களை சிவகந்தன் நினைவுகள் முலம் இந்த நாவலில் வெளிபடுத்த இருக்கிறேன்.
அந்த பெண்னின் ராஜ்ஜியமான குந்தவை ராஜ்ஜியமே இந்த நாவலின் தலைப்பாக வைக்கிறேன்..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக